தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய், அஜித் ஆகியோர் தற்போது நடித்துவரும் படங்களை முடித்துவிட்டு, அடுத்த படத்தை எந்த இயக்குனர்களுக்கு தரப்போகிறார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.. ஆனால் இந்த விஷயத்தில் சூர்யா தெளிவான அறிவிப்பை தனது ரசிகர்களுக்காக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார்.
தற்போது செல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடித்துவரும் என்ஜிகே, சூர்யாவின் 36வது படம் இந்தப்படத்திற்காக 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இருக்கிறது.
சூர்யாவின் 37வது படத்தை கேவி ஆனந்த் இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன்-23ல் லண்டனில் துவங்க இருக்கிறது. தொடர்ந்து சூர்யாவின் 38வது படத்தை இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்குகிறார். அதையடுத்து சூர்யாவின் 39வது படத்தில் மீண்டும் ஹரியுடன் இணைகிறார். இது சிங்கம் 4-ஆக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆக, அடுத்த இரண்டு வருடத்திற்கான படங்கள் பற்றி தெளிவான திட்டம் வைத்திருக்கிறார் சூர்யா.