அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
வரும் ஜூன்-7ஆம் தேதி ரஜினியின் காலா ரிலீஸாவதை அடுத்து மலையாள திரையுலக ஜாம்பவான் நடிகர்கள் கூட ஜூன்-14லிருந்து தான் தங்களது படங்களை ரம்ஜான் ரிலீஸாக வெளியிட இருக்கிறார்கள். இதில் மோகன்லாலின் நீராளி, மம்முட்டியின் ஆப்ரஹாமிண்டே சந்ததிகள், பிருத்விராஜின் மை ஸ்டோரி , ஜெயசூர்யாவின் ஞான் மேரிக்குட்டி ஆகிய படங்கள் தங்கள் ரிலீஸை உறுதி செய்திருந்தன.
இந்தநிலையில் மோகன்லாலின் நீராளி படம் ஜூலை -12க்கு தள்ளிப்போகிறது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் சமீபகாலமாக அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் நிபா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதால் இந்தசமயத்தில் தனது படத்தை வெளியிட வேண்டாம் என மோகன்லால் முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. பாலிவுட் இயக்குனரான அஜய் வர்மா இயக்கியுள்ள இந்தப்படத்தில் நதியா, பார்வதி நாயர் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.