அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
ரஜினிகாந்த், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்க பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' படம் ஜுன் 7ம் தேதி வெளியாகிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு பற்றி பேசிய ரஜினிகாந்த், போராட்டம் நடத்திய அன்று சமூக விரோதிகளால் தான் கலவரம் ஏற்பட்டது என்றார். அதோடு, எதற்கெடுத்தாலும் போராடக் கூடாது என்றும் பேசினார். அவரது பேச்சுக்களுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் 'காலா'வைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சும் சமூக வலைத்தளங்களில் பலமாக எழுந்தது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சிலரும் ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதனால், நார்வே, சுவிஸ் ஆகிய நாடுகளில் 'காலா' படத்தை திரையிடப் போவதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்தின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை 'காலா' படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்தது. அங்கு படத்தை சிக்கலின்றி வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதனிடையே, நேற்று 'காலா' படத்தின் தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காலா' படத்திற்கு இதைவிட அதிகமான எதிர்ப்பை எதிர்பார்த்தேன். ஆனால், அது குறைவாகத்தான் உள்ளது. அரசியல் வேற, சினிமா தொழில் வேற, ஆனாலும் இரண்டையும் சேர்த்தே பார்க்கிறாங்க. என்ன பண்ண முடியும். ஒரு படத்துல விஷயம் இருந்தால் மக்கள் ஏத்துப்பாங்க, நல்லா இல்லைன்னா விட்டுடுவாங்க. காலாவை தடை செய்ய கர்நாடக அரசு அனுமதிக்காது” என்றார் ரஜினிகாந்த்.