பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினியும், கமலும் அரசியலில் தீவிரமாகி உள்ளனர். இருவருமே காவிரி பிரச்சினையில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதனை கர்நாட மாநில அரசியல்வாதிகளும், கர்நாடக அமைப்புகளும் தங்களுக்கு எதிரான கருத்துக்களாக கருதிக் கொண்டு காலா படத்தை திரையிட விட மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இதனால் வருகிற 7ந் தேதி வெளியாகும் காலா படம் கர்நாட மாநிலத்தில் வெளியாவதில் சிக்கல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கமல் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி வெளிவர இருக்கிறது. கர்நாடக அரசியல்வாதிகளும், அமைப்புகளும் ரஜினி, கமல் இருவரது படத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவருகிறார்கள். இதனால் காலா போன்ற சிக்கலை விஸ்வரூபம் இரண்டாம் பாகமும் சந்திக்க இருக்கிறது.
இதுகுறித்து கமலிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... கர்நாடகாவில் படங்கள் வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள், வர்த்தக அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை வியாபாரம் செய்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நான் வியாபார மன நிலையில் இல்லை. அது இப்போது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். அதை சம்பந்தப்பட்ட வியாபாரிகள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு. என்று கமல் பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தார் கமல். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம், காலா தடை குறித்து கேட்டபோது, காலா பிரச்னையை விட காவிரி பிரச்னை முக்கியமானது. அதை இங்குள்ள வர்த்தகசபை பார்த்து கொள்ளும் என்றார்.