கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். கமல் கட்சி தொடங்கி விட்டார். ரஜினி தொடங்க இருக்கிறார். ரஜினி ஆன்மீக அரசியலையும், கமல் பகுத்தறிவு அரசியலையும் முன்னெடுக்கிறார்கள்.
இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் இதுவரை ஒருவர் கருத்துக்கு எதிரான கருத்தை இன்னொருவர் சொன்னதில்லை. அப்படியே மாறுபட்ட கருத்து வந்தாலும் "அது அவர் சொந்த கருத்து" என்று நழுவி விடுவார்கள். கமல், ரஜினி கருத்துக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினி, போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து போலீசை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு நடந்தது. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்று கூறியிருந்தார் இதற்கு எதிரான கருத்துக்களை கமல் தெரிவித்துள்ளார். கமல் கூறியதாவது:
தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் சமூகவிரோதிகள் கிடையாது. அப்படி பார்த்தால் நானும் சமூகவிரோதிதான். போராட்டம் நடத்தினால் சுடுகாடு ஆகும் என்பது ரஜினிகாந்தின் கருத்து. துப்பாக்கி வந்தாலும் திறந்த மனதுடன் ஏற்கும் தன்மையை தூத்துக்குடியில் பார்த்தோம். தூத்துக்குடி போராட்டம் நல்ல ஒரு பாதையாக நினைக்கிறேன். அதில் வன்முறை இருந்திருந்தால் அதை இன்னும் நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். போராட்டங்களில் அந்த கறைக்கூட பதியாமல் இருக்க வேண்டும். போராட்டங்களை நிறுத்தமாட்டார்கள். நிறுத்தவும் கூடாது. என்றார் கமல்.