அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய் ஆண்டனி நடித்த 'சலீம்' படத்தை இயக்கியவர் நிர்மல் குமார். இவர், இப்போது 'சதுரங்கவேட்டை-2' படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த்சாமி, திரிஷா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷ்ன் முடிவடைந்து பல மாதங்களாகியும் இன்னும் காப்பி ரெடியாகவில்லை.
'சதுரங்கவேட்டை-2' படத்தின் தயாரிப்பாளரான காமெடி நடிகர் மனோபாலா, ஏற்கனவே அரவிந்த்சாமிக்கு பேசியபடி சம்பளத்தைக் கொடுக்காததினால் அவர் டப்பிங் பேச மறுத்துவிட்டார்.
இந்த பஞ்சாயத்தினால் 'சதுரங்கவேட்டை-2' படம் முடிவடையாமல் இழுத்துக்கொண்டே போனதினால் வெறுத்துப்போன இயக்குநர் நிர்மல் குமார், அடுத்தப் படத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார். நிர்மல்குமார் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார்.
2008-ல் தமிழகத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.