'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் இருக்கும் ஒரு மோசமான செயல் தமிழ் சினிமா பக்கமும் திரும்பிவிட்டது. அங்கு ஒரு விஷயத்தை பரபரப்பாக்க வேண்டுமென்றே ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிடுவார்கள். அது போல தமிழ் சினிமாவிலும் தற்போது சில படங்களைப் பற்றிப் பேச வைக்க சர்ச்சைகளை அவர்களே உருவாக்குகிறார்கள்.
பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நாச்சியார்' பட டீசரில் ஒரு மோசமான கெட்ட வார்த்தையை படத்தின் நாயகியாக ஜோதிகாவை பேச வைத்தார்கள். அதன் பின் அந்த டீசர் பேசப்பட்டதோ இல்லையோ, அந்தப் படத்தில் ஜோதிகா பேசிய அந்த மோசமான கெட்ட வார்த்தை சர்ச்சையானது. அதன் பின் இப்போது, நேற்று வெளியான 'தமிழ்ப் படம் 2.0' டீசரில் ஒரு கெட்ட வார்த்தையை படத்தின் நாயகனான சிவாவை பேச வைத்துள்ளார்கள்.
யு டியூபில் வெளியாகும் வீடியோக்களுக்கு சென்சார் தேவையில்லை. அந்த தைரியத்தில் படத்தை உருவாக்குபவர்கள் குறைந்தபட்ச பொறுப்பு கூட இல்லாமல் விளம்பரத்திற்காகவும், பரபரப்பிற்காகவும் இப்படி கெட்ட வார்த்தைகளை அவர்களது டீசர்களில் சேர்க்கிறார்கள். இன்றைக்கு மொபைல் மூலமே கூட பல குழந்தைகள் இந்த டீசர்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டு. அப்படியிருக்கு இப்படியெல்லாம் ஒரு கெட்ட வார்த்தை வசனத்தில் படத்தில் சேர்க்க வேண்டுமா ?. இனிமேலாவது சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அவர்களின் படைப்புகளில் நடிக்கும் நடிகர்களும் யோசிக்கட்டும்.