ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வரும் ஜீவா, தற்போது 'கீ', 'கொரில்லா', 'ஜிப்ஸி' ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'கீ' படத்தின் வேலைகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து ரிலீஸ் தேதிக்காக அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
கீ படத்தை அடுத்து கொரில்லா படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கும் 'கொரில்லா' படத்தில் ஒரு நிஜ சிம்பன்ஸி குரங்கையும் நடிக்க வைத்தனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்திற்காக சென்னையில் அமைக்கப்பட்ட செட்டிலும் 'கொரில்லா'வின் படப்பிடிப்புகள் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றோடு 'கொரில்லா'வின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வகையில் நேற்று படப்பிடிப்பு முடிவடைந்ததும் பூசணிக்காய் உடைக்கப்பட்டது.