'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பலியானவர்களின் குடும்பத்தினர், மற்றும் காயமடைந்தவர்களை சந்திக்க தூத்துக்குடி சென்ற ரஜினி, அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர், சில கருத்துக்களை கூறினார். தற்போது அந்த கருத்துக்களுக்காக ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் குமார் என்பவர் அளித்துள்ள அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது...
ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிப்பததாக கூறி அந்த மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேட்டியளித்துள்ளார். கலவரத்துக்கு காரணம் சமூக விரோதிகள் தான் என்றும், அவர்கள் யார் என்று தனக்குத் தெரியம் என்றும் கூறியுள்ளார். அவர்கள் யார் என்பதை கூறவும் மறுத்திருக்கிறார். தனக்கு தெரிந்த தகவலை அரசுக்கு தெரிவிக்காமல் இருப்பது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.