விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, டோலிவுட்டில் நடிகை களுக்கு நடந்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து செய்திகள் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சில மாதங்களாக டோலிவுட்டில் வீசிக்கொண்டிருந்த அந்த புயல் இப்போதுதான் கரை ஒதுங்கியிருக்கிறது.
மேலும், ஸ்ரீரெட்டியின் அந்த கருத்தினை பல நடிகை களும் ஆதரித்தபோதும், ரகுல்பிரீத்சிங் உள்ளிட்ட சில நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமா உலகம் ரொம்ப ஆரோக்யமாக உள்ளது. என்னை இதுவரை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லை என்று கூறினர்.
அதையடுத்து, சமீபத்தில் பிலிம்பேர் அட்டைப் படத்தை அலங்கரித்த ரகுல்பிரீத்சிங் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், தென்னிந்திய சினிமாவில் நான் ரொம்ப பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். அதோடு, இந்த கலாச்சாரம் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. அதனால் தென்னிந்திய படங்களில் அதிகமான படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.