தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்காமல் போக மாட்டேன்' என்ற முடிவெடுத்துள்ளார் போலிருக்கிறது, ரெஜினா. அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களாக இருந்தாலும் சரி, கவர்ச்சி வேடமாக இருந்தாலும் சரி; உடனடியாக நடிக்க சம்மதித்து விடுகிறார்.
அடுத்ததாக, அவரது நடிப்பில் வெளிவர தயாராக உள்ளது, மிஸ்டர் சந்திரமவுலி. ரெஜினா, சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர் என்றாலும், இதுவரை, தான் நடித்த படங்களில் சொந்த குரலில் பேசியது இல்லை. அவருக்கு இருந்த இந்த ஏக்கம், மிஸ்டர் சந்திரமவுலி மூலம் தீர்ந்து விட்டது.
இந்த படத்துக்காக, முதல் முறையாக சொந்த குரலில் பேசியுள்ளதை பரவசத்துடன் கூறி வருகிறார், ரெஜினா. தெலுங்கு படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த அவரது பார்வை, சமீபகாலமாக, தமிழ் படங்கள் மீது திரும்பியுள்ளது. கோலிவுட், அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.