'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வருடம் நடிகை வழக்கில் சிக்கி சிறைசென்ற மலையாள நடிகர் திலீப், ஜாமீனில் வெளிவந்தபின் தனது படங்களின் படப்பிடிப்பு நிகழ்வுகளில் மட்டுமே கலந்து வந்தார். போகப்போக ஒன்றிரண்டு நண்பர்களின் திரைப்பட வெற்றி கொண்டாட்டம், கோயில் வழிபாடு ஆகியவற்றில் கலந்து கொண்டாலும் தனி ஆளாகவே கலந்து கொண்டார்.
நடிகை வழக்கில் சிக்குவதற்கு முன்னதாக கடந்த வருடம் வெளிநாட்டுக்கு சென்று திலீஷ் ஷோ நடத்தியபோது தனது மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகியோருடன் குடும்ப சகிதமாக சென்றுவந்த திலீப், அதன்பின் குடும்பத்துடன் எந்த நிகழ்சசிகளிலும் கலந்துகொள்ளவில்லை..
இந்தநிலையில் இப்போதுதான் சில தினங்களுக்கு முன்னதாக நண்பர்கள் இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளார் நடிகர் திலீப்.