பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் ராம்சரண், சமந்தா இணைந்து நடித்த ரங்கஸ்தலம் என்கிற படம் வெளியானது. சுகுமார் இயக்கியிருந்த இந்தப்படம் சூப்பர்ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பிலும் இடம் பிடித்தது. குறிப்பாக இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் காந்தி என்கிற கதாசிரியர், தான் எழுதிய உக்குப்பாடம் என்கிற கதையில் உள்ள முக்கியமான காட்சியை காப்பியடித்து ரங்கஸ்தலம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் இந்த குற்றசசாட்டை மறுத்துள்ள இயக்குனர் சுகுமார், தானோ, தனது பட தயாரிப்பாளார்களோ இதற்கு முன் சம்பந்தப்பட்ட காந்தி என்பவரை பார்த்ததே கிடையாது என்றும், அவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் 1979ல் வெளியான ரஜினி நடித்த தர்மயுத்தம் படத்தை பார்த்தபோது, அதில் தான் பழிதீர்க்க நினைக்கும் தன் கையால் தான் சாக வேண்டும் என்பதற்காக, அவனை விபத்தில் அடிபட்டு சாகவிடமால் ஹீரோவே காப்பாற்றி பின்னர் பழிதீர்க்கும் காட்சி என்னை ரொம்பவே கவர்ந்தது.. அதை தழுவித்தான் ரங்கஸ்தலம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்தேன் என கூறியுள்ளார் சுகுமார்.