ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் மற்றும் பலர் நடிக்க புதிய படம் ஒன்று விரைவில் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதத்தில் லண்டனில் ஆரம்பமாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் ஆகிய வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
சூர்யாவுக்கு தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வரவேற்பு உள்ளது. அதனால், அந்த ரசிகர்களையும் கவரும் விதத்தில் மலையாளத்திற்காக மோகன்லாலையும், தெலுங்கிற்காக அல்லு சிரிஷையும் படத்தில் நடிக்க வைக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக சாயிஷா நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். அதனால், கண்டிப்பாக சூர்யா ஜோடியாக அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம். அண்ணன், தம்பி இருவரும் அடுத்தடுத்து ஒரே நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பது வழக்கம். அதனால், அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம். ஆங்கிலப் படம் அளவிற்கு படத்தை எடுக்க கே.வி.ஆனந்த் முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள். சூர்யா நடிப்பில் முதன் முதலில் 100 கோடி செலாவில் தயாராக உள்ள படம் இது.