மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
தமிழகத்தில் விஷகிருமிகளை அரசு அடக்கி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மாநிலத்திற்கு ஆபத்து உள்ளதாக நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
மக்கள் பயம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்தேன். உள்ளே சென்ற பார்த்த போது, சிலர் பயந்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். மக்கள் பயத்தில் உள்ளனர். காயமடைந்தவர்களை பார்க்கும் போது வேதனையாக உள்ளது.
ஆபத்து
கலெக்டர் அலுவலகத்தில் வாகனங்களை எரித்தது மக்கள் கிடையாது. சமூக விரோதிகள் தான் ஊடுருவினர். அவர்களின் வேலை தான் இது. போராட்டத்தின் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், இது தான் நடந்தது. இதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். விஷ கிருமிகளை அடக்கி வைத்திருந்தார். அவரது வழியை பின்பற்றி, தற்போதைய அரசும் அவர்களை அடக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்திற்கு ஆபத்து.
அனுமதி கூடாது
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிர்வாகிகள் நீதிமன்றம் சென்றால், அவர்கள் மனிதர்கள் கிடையாது. அங்குள்ளவர்கள் அனைவரும் மனிதர்கள் தான். வெற்றி பெறக்கூடாது. வெற்றி பெற விடமாட்டார்கள். இத்தனை பேர் இறந்தும், அடிபட்டு கிடக்கும் போது, ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. மனித சக்தி, முன்பு ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை எந்த அரசும் திறக்க அனுமதிக்கக்கூடாது.
போராட்ட பூமி..
தமிழகத்தில் அனைத்திற்கும் போராட்டம் நடக்கிறது. சிலர் நல்லதுக்காகவும் போராடுகின்றனர். சிலர் கெட்டதுக்காகவும் போராடுகின்றனர். சிலர் போராட்டத்தை ஊக்குவிக்கின்றனர். மக்கள் கவனமாக இருக்க வேண்டும். போராட்ட பூமியாக மாறினால், இங்கு வியாபாரிகள் வர மாட்டார்கள். வேலைவாய்ப்புகள் வராது. விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். போராட்டத்தின் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கும்போது, அரசும் விதிகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட்டை அணுகி தீர்வு காண வேண்டும். நடந்தது நடந்து போய் விட்டது.
உளவுத்துறை தவறு
அனைத்திலும் அரசியல் செய்கிறார்கள். மக்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் தெரியும். நேரம் வரும்போது முடிவு செய்வார்கள். சமூக விரோதிகள் உள்ளேநுழைவதை கண்டுபிடிக்க தவறியது உளவுத்துறையின் தவறு. மக்களை சுட்டது குறித்து குழப்பமாக உள்ளது. வன்முறையின் போது, போலீசார் மீது கை வைக்கிறவர்களை விடக்கூடாது. நம்மை காப்பாற்றுபவர்கள் அவர்கள் தான். போலீசாரை தாக்கியவரை பிடித்து நடவடிக்கை எடுப்பதுடன்,அவர்களை படம் பிடித்து டிவியிலும் நாளிதழ்களிலும் வெளியிட வேண்டும். அனைத்திற்கும் ராஜினாமா என்பது சரியல்ல. அந்த அரசியலில் நுழைய விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.