ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் ரஜினி.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினி, விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு, கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவரை வரவேற்றனர். அங்கிருந்து வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடம் ரஜினி நலம் விசாரித்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000 மும் நிதி உதவி வழங்கினார்.
தூத்துக்குடி கிளம்பும் முன்னர் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கூறியதாவது: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் அவர்கள் என்னை பார்த்து சந்தோஷமடைவார்கள். அதிமுக.,வை திமுக.,வும், திமுக.,வை அதிமுக.,வும் விமர்சிப்பது அரசியல். ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதால் நாடு முன்னேறாது என்றார்.