ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
''காவிரி விஷயத்தில் கர்நாடகாவுக்கு எதிராக நடிகர் ரஜினி பேசியிருப்பதால், அவர் நடித்துள்ள, 'காலா' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்,'' என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த், தெரிவித்தார்.
ரஜினி நடித்துள்ள காலா படம் வருகிற ஜூன் 7ந் தேதி வெளிவருகிறது. காலா படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறியிருந்தார். மேலும் சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
'காலா' திரைப்படத்தை, கர்நாடகத்தில் திரையிடுவது தொடர்பாக, கன்னட திரைப்பட வர்த்தகசபை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
காவிரி நதி நீர் விஷயம் தொடர்பாக, நடிகர் ரஜினி, கர்நாடகாவுக்கு எதிராக பேசியுள்ளார். இதனால், காலா திரைப்படத்தை வெளியிட்டால் மக்கள் மத்தியில் பிரச்னை எழும் என்று, கூட்டத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இறுதியில், கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த், கூறுகையில், ''காவிரி விஷயம் தொடர்பாக, கர்நாடகாவுக்கு எதிராக, ரஜினி பேசியிருப்பது தவறு. அவர் மன்னிப்பு கேட்டாலும், 'காலா' திரைப்படம் திரையிட மாட்டோம்,'' என்றார்.
கர்நாடகாவில் ரஜினிக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பலரும் எதிர்பார்த்திருந்த 'காலா' திரைப்படம் திரையிடுவதற்கு, கன்னட திரைப்பட வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.