கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
கர்நாடகா மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் விமர்சகர் ஆகவும் மாறியிருப்பவர் பிரகாஷ்ராஜ். எந்தக் கட்சியைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். தேர்தல் முடிந்ததும் கர்நாடகாவில் பாஜக முதல்வர் பதவியேற்றதும், பிரகாஷ்ராஜ் அவ்வளவுதான் என பலரும் அவருக்காக சோக கீதம் பாட ஆரம்பித்தார்கள். நல்லவேளையாக பாஜக ஆட்சியிலிருந்து சில நாட்களில் விலகியது. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன.
ஆனால், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மட்டுமே பதவியேற்றுள்ளனர். அமைச்சர்கள் யார் யார், அவர்களது இலாக்காக்கள் என்ன என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அது தொடர்பாக காங்கிரஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இடையே குழப்பம் நீடித்து வருகிறது. இது குறித்து கர்நாடகாவின் புதிய அரசியல் விமர்சகர் ஆன நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலடித்துள்ளார்.
“கர்நாடகா, அன்புள்ள ஜேடிஎஸ் மற்றும் காங்கிரஸ், ஒரு வாரம் ஆகிவிட்டது. உங்கள் அமைச்சரவை மற்றும் இலாக்காக்கள் பற்றி சீக்கிரம் முடிவு செய்யுங்கள். மக்களாகிய நாங்கள் அரசாங்கத்தைப் பார்க்க வேண்டும், ஆட்சி செய்ய ஆரம்பியுங்கள்,” எனக் கிண்டலடித்திருக்கிறார்.