டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் ரஜினி நடித்து வரும் 7ம் தேதி திரைக்கு வரவிருக்கும் காலா படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் லைகா நிறுவனம், அதை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பகுதி வாரியாக விற்பனையைத் துவக்கி இருக்கிறது.
அதன்படி, சென்னை ஏரியாவின் விநியோக உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் பெற்றுள்ளது. சேலம் ஏரியாவின் உரிமையை 7ஜி நிறுவனத்தின் சிவா பெற்றுள்ளார். மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களின் விநியோக உரிமையை, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பைனான்சியர் அன்பு செழியன்.
சில மாதங்களுக்கு முன், இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார், தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அதற்கு அன்பு செழியனின் கொடுமைதான் காரணம் என, அவர் கடிதமும் எழுதி விட்டுச் சென்றார். அது தொடர்பான வழக்கில், அன்புச் செழியன் இன்னமும் தலைமறைவாகத்தான் இருக்கிறார். போலீசார் அவரை இன்னமும் தேடிக் கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களுக்கான காலா படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருப்பது, சசிக்குமார் தரப்பினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சினிமாத் துறை பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.