ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சிவாஜி பேரன் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர் வெற்றிகளை கொடுத்த அவர் தற்போது தொடர் தோல்விகளை கொடுத்து வருகிறார். இது என்ன மாயம், வாகா, வீரசிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களில் நடித்து வருகிறார்.
காமெடி கலந்த கேரக்டர்கள் தனக்கு செட்டாகவில்லை. அதுதான் தோல்விகளுக்கு காரணம் என்று கருதுகிறார். அவர் சீரியசாக நடித்த கும்கி, இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு படங்கள் வெற்றி பெற்றன. இதனால் அடுத்து ஒரு சீரியசான படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
அந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். அவர் தற்போது சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க இருந்தவர் அதை ஒதுக்கி வைத்து விட்டு விக்ரம் பிரபுவை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை 2008-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.