தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவாஜி பேரன் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர் வெற்றிகளை கொடுத்த அவர் தற்போது தொடர் தோல்விகளை கொடுத்து வருகிறார். இது என்ன மாயம், வாகா, வீரசிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களில் நடித்து வருகிறார்.
காமெடி கலந்த கேரக்டர்கள் தனக்கு செட்டாகவில்லை. அதுதான் தோல்விகளுக்கு காரணம் என்று கருதுகிறார். அவர் சீரியசாக நடித்த கும்கி, இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு படங்கள் வெற்றி பெற்றன. இதனால் அடுத்து ஒரு சீரியசான படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
அந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். அவர் தற்போது சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க இருந்தவர் அதை ஒதுக்கி வைத்து விட்டு விக்ரம் பிரபுவை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை 2008-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.