‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காமெடி நடிகர் சூரியும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதுகுறித்து அவர் கூறியுள்ள செய்தியில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்முடைய தமிழர்களை இலங்கையில் சுட்டுக்கொன்றார்கள். அது பக்கத்து நாடு. ஆனால் இப்போது நம்முடைய நாட்டிற்குள்ளேயே அதுவும் நமக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசே தமிழர்களை சுட்டுக்கொன்றிருப்பது கொடுமையாக உள்ளது.
அவர்கள் என்ன கேட்டார்கள், சுவாசிக்க நல்ல காற்றைத்தானே கேட்டார்கள். கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் வருகிறது. இதிலிருந்து எதிர்கால சந்ததியை காப்பாற்ற வேண்டும் என்று தானே கேட்டார்கள். அதற்குகூட உரிமையில்லையா.
தண்ணீர் வேண்டுமானால் அண்டை மாநிலத்தில் வாங்கிக்கொள்ளலாம். காற்றை எங்கே போய் வாங்குவது. அப்படி சுவாசிக்க நல்ல காற்றை கேட்டவர்களை சுட்டுக்கொன்று அவர்களின் மூச்சுக்காற்றையே நிறுத்தினால் என்ன நியாயம் என்று தனது கருத்தினை வெளியிட்டுள்ளார் சூரி.