பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தியா படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது தனுஷூடன் மாரி-2, சூர்யாவுடன் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் என்ஜிகே படத்தில் சூர்யாவுடன் நடிப்பதை மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.
அதாவது, நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே சூர்யாவின் தீவிரமான ரசிகை. அதனால் அவருடன் என்ஜிகே படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்ததும் பெரிய மகிழ்ச்சியடைந்தேன். சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக காத்திருந்தேன்.
முதல் நாள் சூர்யாவை நேரில் பார்த்தபோது எனக்கு பேச்சே வரவில்லை. என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினேன். ஆனால், சூர்யா சாதாரணமாக சிரித்தபடி பேசினார். கேமராவுக்கு வெளியே நார்மலாக இருக்கிறார். கேமரா முன்பு செல்லும்போது முற்றிலுமாக மாறிவிடுகிறார். அவரிடமிருந்து நடிப்பு திறனையும் கற்றுக் கொண்டுள்ளேன் என்கிறார் சாய்பல்லவி.