தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமா பாடல்களை ரசிக்கும் பெரும் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. எம்எஸ்வி, கேவி மகாதேவன், இளையராஜா, சங்கர்கணேஷ், ஏஆர் ரகுமான் என இசை ஜாம்பவான்கள் சினிமா இசையென்றாலும் அதற்கனெ ஒரு இலக்கணத்துடன் இசை அமைத்தனர்.
ஆனால், சமீப காலமாக சினிமா இசையிலும், பாடல்களிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டன. இதெல்லாம் இசையா, இதெல்லாம் பாடல் வரிகளா என கேள்விகளை எழுப்பும் பாடல்கள் ரசிகர்களிடம் சூப்பர் ஹிட்டாக அமைகின்றன.
சத்தத்தை இசை என்றும், வசனங்களை பாடல்கள் என்றும் ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு பாடலாக 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம் பெற்றுள்ள 'கல்யாண வயசு' என்ற பாடல் பத்து நாட்களுக்கு முன்பு யு டியுபில் வெளியிடப்பட்டது.
சிவகார்த்திகேயன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் என்பதனால் அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. பத்து நாட்களில் இந்தப் பாடல் யு டியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து தற்போது 1 கோடியே 14 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தப் பாடலில் நயன்தாராவுடன் யோகி பாபு மட்டுமே இருக்கிறார்.
விஜய் நடிக்கும் படங்களின் பாடல்கள் தான் விரைவாக ஒரு கோடி பார்வைகளைப் பெறும். சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் நடித்த 'காலா' பாடல்கள் கூட 10 லட்சம் பார்வைகளைப் பெறுவதற்கே முக்கி முனகிக் கொண்டிருக்கிறது. ஆனால், 'கல்யாண வயசு' பாடல் மிக எளிதாக 1 கோடி பார்வைகளைக் கடந்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.