600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தனது கண் சிமிட்டல்கள் மூலம் ஒரே பாட்டில் பிரபலமானவர் தான்கேரளாவை சேர்ந்த, புருவ அழகி எனப்படும் பிரியா வாரியர்.. சோஷியல் மீடியா மூலம் லட்சக்கணக்கில் ரசிகர்களை பெற்றுள்ள இவருக்கு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்பு வருகிறது.. இவரும் அதில் தவறாமல் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஏசியாநெட் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்தார் பிரியா வாரியர்.. விழாவிற்கென அவர் விசேஷமாக அணிந்து வந்த உடை தரையில் படாமல் தூக்கிப்பிடிப்பித்துக்கொண்டு ஒரு பெண் உதவியாளரும் கூடவே நடந்து வந்தார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவ, நடித்து ஒரு படம் கூட ரிலீசாகவில்லை.. அதற்குள் துணியை பிடிக்க ஆள் வைக்கும் அளவுக்கு அப்பாடக்கர் ஆகிவிட்டாரா இவர் என்கிற ரேஞ்சில் நெட்டிசன்கள் பிரியா வாரியரை கலாய்த்து தள்ளிவிட்டனர்.