ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த நடிகை சாவித்திரி வேடத்தில் தற்போது மகாநதி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அளவற்ற பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இதையடுத்து மற்ற சில நடிகைகளும் இதுபோன்ற சுயசரிதை கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்தவகையில் மலையாள நடிகை ரீமா கல்லிங்கலிடம் அப்படி யாருடைய கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டபோது சற்றும் தயங்கமால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, நங்கேலி என்கிற புரட்சிப்பெண் கேரக்டரிலும் நடிக்கும் ஆசை ரீமாவுக்கு இருக்கிறதாம்.
புரட்சிகரமான கேரக்டர்களில் தொடர்ந்து நடிக்கும் நடிகை ரீமா கல்லிங்கலிடம் இருந்து இப்படி ஒரு பதில் வந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை..
தமிழில் பரத் ஜோடியாக யுவன் யுவதி என்ற படத்தில் ரீமா கல்லிங்கல் நடித்திருக்கிறார்.