தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித் பற்றி எந்த ஒரு தகவலைச் சொன்னாலும் அதை அஜித் ரசிகர்கள் உடனே கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். ரசிகர் மன்றம் வேண்டாம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு வேண்டாம் என பல வருடங்களாக ஒரு வைராக்கியத்துடன் இருந்து வரும் அஜித் எங்காவது வெளியில் செல்லும் போது ரசிகர்கள் வந்து சந்தித்தால் அவர்களிடம் துளியும் கோபப்படாமல் முடிந்தவரை அனைவருடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.
அதிலும் செல்பி யுகத்தில் பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆசைப்படுவதும் அதிகமாகிவிட்டது. அதற்கும் முகம் சுளிக்காமல் அனைவருடனும் எடுத்துக் கொள்கிறார் என ஒரு திரையுலகப் பிரபலம் தெரிவித்திருக்கிறார்.
விஸ்வாசம் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார் அஜித். அப்போது அவருடன் விமான பைலட் முதல் சாதாரண பயணி வரை சுமார் 200 பேர் வரை செல்பி எடுத்துக் கொண்டார்களாம். இது பற்றிய தகவலை அவருடன் பயணித்த இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
“கேப்டன்கள் முதல் பயணிகள் வரை 100க்கும் மேல் 200 பேர் வரை அன்பான அஜித்துடன் இன்று செல்வி எடுத்துக் கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும் மிகவும் அன்பாகவும், எளிமையான அணுகுமுறையுடனும் அவர் பழகியது சிறப்பு,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.