பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பைரவா படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் மீண்டும் விஜய்யுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை சமீபத்தில் அப்படக்குழுவினருடன் கொண்டாடியிருக்கிறார்.
அப்போது அவர் பேசும்போது, நடிகையர் திலகம் படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக அனைவருமே சொன்னார்கள். என்றாலும், எனது நடிப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது மீடியாக்கள்தான். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்கு பிறகு என் மீதான மற்றவர்களின் பார்வையே மாறியிருக்கிறது. இதுவரை சாதாரணமான கதைகளுக்கு என்னை ஒப்பந்தம் செய்ய வந்தவர்கள் கூட இப்போது, கதையின் நாயகியாக பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சாவித்ரி வேடத்தில் நடித்தது என்னை ஒரு நடிகையாக அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.