பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
பைரவா படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் மீண்டும் விஜய்யுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை சமீபத்தில் அப்படக்குழுவினருடன் கொண்டாடியிருக்கிறார்.
அப்போது அவர் பேசும்போது, நடிகையர் திலகம் படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக அனைவருமே சொன்னார்கள். என்றாலும், எனது நடிப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது மீடியாக்கள்தான். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்கு பிறகு என் மீதான மற்றவர்களின் பார்வையே மாறியிருக்கிறது. இதுவரை சாதாரணமான கதைகளுக்கு என்னை ஒப்பந்தம் செய்ய வந்தவர்கள் கூட இப்போது, கதையின் நாயகியாக பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சாவித்ரி வேடத்தில் நடித்தது என்னை ஒரு நடிகையாக அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.