பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பைரவா படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் மீண்டும் விஜய்யுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை சமீபத்தில் அப்படக்குழுவினருடன் கொண்டாடியிருக்கிறார்.
அப்போது அவர் பேசும்போது, நடிகையர் திலகம் படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக அனைவருமே சொன்னார்கள். என்றாலும், எனது நடிப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது மீடியாக்கள்தான். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்கு பிறகு என் மீதான மற்றவர்களின் பார்வையே மாறியிருக்கிறது. இதுவரை சாதாரணமான கதைகளுக்கு என்னை ஒப்பந்தம் செய்ய வந்தவர்கள் கூட இப்போது, கதையின் நாயகியாக பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சாவித்ரி வேடத்தில் நடித்தது என்னை ஒரு நடிகையாக அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.