'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த பிப்ரவரி மாதம் திடீர் மரணமடைந்து இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. அவரது மரணம் குறித்து இன்னும் சிலர் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து தான் வாழ்க்கையை கற்றுக்கொண்டதாக நடிகர் நாகார்ஜூனா கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி ஒரு மிகப்பெரிய நடிகை. கோவிந்தா கோவிந்தா என்ற படத்தில் என்னுடன் இணைந்து நடித்தார். அது மறக்க முடியாத நினைவுகள். அவருடன் நடித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதுகூட அவர் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
அவரது மரணம் எதிர்பாராதது. ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு நான் என்னைச் சுற்றியிருப்பவர்களை நேசிக்கத் தொடங்கியிருக்கிறேன். வாழ்கிற ஒவ்வொரு நொடியையும் சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க விரும்புகிறேன் என்கிறார் நாகார்ஜூனா.