அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ் திரை உலகில், 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, ஆச்சி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர், மனோரமா. திருவாரூர் மாவட்டம், ராஜமன்னார்குடியில் பிறந்த இவருக்கு, பெற்றோர் சூட்டிய பெயர், கோவிந்தம்மாள்; ஆனால், எல்லாரும் இவரை, கோபிசாந்தா என்றே அழைத்தனர்.
நடிப்புத் துறையில், 50 ஆண்டுகளை கடந்து, பொன்விழா கொண்டாடிய இவர், தன், 12வது வயதில், முதன் முதலாக, யார் மகன் என்ற நாடகத்தில் நடித்தார். மேலும், அக்காலத்தில், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த, அந்தமான் கைதி மற்றும் அண்ணாதுரை எழுதிய, வேலைக்காரி போன்ற நாடகங்களிலும் நடித்தார்.
கருணாநிதி எழுதிய, உதயசூரியன் எனும் நாடகத்தில், கருணாநிதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்தார் மனோரமா. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவருக்கு, நாடக இயக்குனர், திருவேங்கடம் மற்றும் ஆர்மோனிய கலைஞர், தியாகராஜன் ஆகியோர் தான், மனோரமா எனும் பெயரை சூட்டினர்.
முதன் முதலாக, 1958ல், மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார், கவியரசர் கண்ணதாசன். இதில், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார், மனோரமா. அதன் பின், தொடர்ந்து, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் இணைந்து, ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
அண்ணாதுரை, கருணாநிதி போன்றோருடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா மற்றும் ஆந்திரா முதல்வராக இருந்த மறைந்த, என்.டி.ராமராவ் என்று, மொத்தம் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர்!
மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த ஆச்சி, நாடகத் துறையின் மூலமாக, கலைத்துறை எனும் மாளிகைக்குள் காலடி எடுத்து வைத்தார். பின், வெள்ளித் திரையில், காமெடி, அம்மா, ஆச்சி, வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்தும், பாடகி அவதாரம் எடுத்தும், தனி முத்திரை பதித்ததுடன், சின்னத் திரையிலும் காலுான்றி, அனைத்து இல்லங்களுக்குள்ளும் நுழைந்து, புகழின் உச்சத்தை தொட்டார்.
சினிமாவில் பொன்விழா கொண்டாடிய மனோரமாவின் 81-வது பிறந்த தினம் இன்று. இந்த மண்ணை விட்டு அவர் மறைந்தாலும் தமிழ் சினிமாவில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் என்றும் அழியாது.