ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தூத்துக்குடி சம்பவத்திற்கு காரணமான இந்த அரசு அகற்றப்பட வேண்டும் என நடிகர் சிம்பு ஆவேசமாய் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சிம்புவும் வீடியோ வடிவில் தன் கோபத்தை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது.... பிரச்னைகள், போராட்டங்கள் இப்போது உயிரிழப்புகள். தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது. தங்களின் அடிப்படை உரிமை மற்றும் சுற்றுச்சூழலுக்காக போராடிய மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
அரசியல் தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். நமக்கு இரங்கல்கள் தேவையில்லை, அதனால் எந்த பலனும் இல்லை. இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை. தற்போது நமக்கு மாற்றம் தேவை. இந்த அரசு உடனடியாக மாற்றப்பட வேண்டும். எனது நோக்கம் தீர்வை நோக்கி மட்டுமே. அதற்கான தீர்வு என்னிடம் உள்ளது. இந்த பிரச்னையின் பின்னால் இருப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அனைவருக்கும் இந்த செய்தி போய் சேர வேண்டும். தமிழர்கள் உடன் மோத வேண்டாம் என ஆவேசமாய் பேசியிருக்கிறார்.