ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தி நடிகை என்றாலும் மின்சார கனவு என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கொள்ளையடித்தவர் நடிகை கஜோல். அதன் பிறகு சமீபத்தில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடித்தார்.
ஹிந்தியில் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1999ல் ஹிந்தி நடிகர் அஜய்தேவ்கானை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள மெழுகு சிலை அருங்காட்சியம் கஜோலுக்கு மெழுகு சிலை அமைத்து கவுரவப்படுத்தியுள்ளது. இந்த சிலையை தனது மகள் ரைசாவுடன் சென்று திறந்து வைத்தார் கஜோல். அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உற்சாகத்துடன் தனது சிலை அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். தன் வாழ்வின் உச்சபட்ச மகிழ்ச்சியை அடைந்ததாகவும், அதனை தன் மகளுடன் கொண்டாடியதாகவும் தெரிவித்தார் கஜோல்.