ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
கபாலி படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி இரண்டாவது முறையாக இணைந்துள்ள காலா படம் ஜூன் 7-ஆம் தேதி உலம் முழுக்க வெளியாக இருந்த நிலையில் தற்போது பரபரப்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நானா படேகர் வில்லனாக நடிக்கும் இப்படத்தில், ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ் இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கின்றனர். காலாவின் வெளியீட்டு தேதி நெருங்கிவிட்ட சூழலில் படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைக்கும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் அடிபடுகிறது.
காலா படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மும்மொழிகளின் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் டிவி நிறுவனமும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனமும் வாங்கியுள்ளன. தெலுங்கு, ஹிந்தி டப்பிங்கை லோக்கல் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உடன் இணைந்து தனுஷின் வுண்டர்பார் நிறுவனமே பார்ட்னர்ஷிப்பில் வெளியிடுகிறது.
ஏப்ரல் 27 அன்று வெளியாகவிருந்த காலா படம் திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில தினங்களே உள்ளநிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில்தான் மீண்டும் காலா படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காரணமாக தமிழகமே கொந்தளிப்பான சூழலில் இருக்கிறது. இந்தநேரத்தில் காலாவை ரிலீஸ் செய்தால், நிச்சயமாக தனக்கு கடுமையான எதிர்ப்புகள் வரும் என்று நினைக்கிறாராம் ரஜினி. காலாவை வைத்து தனக்கு கண்டனங்கள், விமர்சனங்கள் வருவதை அவர் விரும்பவில்லையாம்.
எனவே காலா படத்தின் ரிலீஸை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கும்படி தனுஷிடம் ரஜினி கேட்டுக்கொண்டிருக்கிறார். தனுஷ் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.