தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
100 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர் இசை அமைப்பாளர் பரணி. சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தவர் இப்போது இயக்குனராகியிருக்கிறார். ஒண்டிக்கட்ட என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். பிரண்ட்ஸ் சினி மீடியா சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இனணந்து தயாரித்திருக்கும் படம் .
விக்ரம் ஜெகதீஷ் என்ற புதுமுகம் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நேகா நடித்திருக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நடித்தவர். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடித்துள்ளனர் ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார். பரணியே இசை அமைத்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதுகுறித்து பரணி கூறியதாவது:
ஒவ்வொரு இசை அமைப்பாளனுக்குள்ளும் ஒரு இயக்குனர் இருக்கிறார். அதனால்தான் அவர்களால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பாடல்களை உருவாக்க முடிகிறது. என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கதை. இப்போது படமாகியிருக்கிறது. இசை அமைப்பாளராக ஏற்றுக் கொண்ட மக்கள் இயக்குனராகவும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சினிமாவின் நிலவி வந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து இப்போதுதான் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் நான் இசையமைத்து இயக்கி இருக்கும் "ஒண்டிக்கட்ட" திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்றார் பரணி.