‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
வெள்ளாவி தேவதை டாப்சி, இப்போது தமிழில் அதிகமாக நடிப்பது இல்லை. ஆனால், பாலிவுட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். பிங்க் போன்ற படங்கள், அவருக்கு, பாலிவுட்டில், விருதுகளையும், பாராட்டையும் குவித்ததால், தொடர்ந்து அங்கேயே கவனம் செலுத்தி வருகிறார்.
'தீபிகா, பிரியங்கா போன்றோர், ஹாலிவுட் படங்களில் நடிக்கின்றனர்; உங்களுக்கு வாய்ப்பு வரவில்லையா' என, அவரிடம் கேட்டபோது, பொங்கித் தீர்த்து விட்டார். 'எனக்கு தேவையான படங்கள், பாலிவுட்டிலேயே கிடைக்கின்றன. எல்லாமே எனக்கு திருப்தி அளிக்கும் கேரக்டர்கள் தான். அதனால், ஹாலிவுட்டுக்கு சென்று, ஒவ்வொருவரிடமும் வாய்ப்பு தாருங்கள் என, கெஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை' என்றார்.
டாப்சியின் இந்த பேச்சு, ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்து வரும், பிரியங்கா, தீபிகா போன்ற நடிகையரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'நாங்கள், ஹாலிவுட்டில் வாய்ப்புக்கு அலைகிறோமா...' என, ஆவேசப்படுகின்றனர், அவர்கள்.