தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
3 படம் திரைக்கு வருவதற்கு முதல்நாள் வரை எடிட்டிங்கில் ஏகப்பட்ட மாற்றங்களை சந்தித்ததால் ரிலீஸூக்கு முதல் நாள் சென்னை சத்யம் திரையரங்கில் இரவு 9 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த பிரிமியர் ஷோவு படம் ரிலீஸ் ஆன மார்ச் 30ம் தேதி இரவு 10.30 மணிக்கு மாற்றப்பட்ட கதை தெரியும்! பிரிமியர் ஷோவுடன் பத்திரிகையாளர் காட்சிகளையும் இதுநாள் வரை இல்லாத அதிசயமாக இரவு 10.30 மணிக்கு வைத்து பாதி தூக்கத்தில் பத்திரிகையாளர்களை படம் பார்க்க வைத்ததற்கான ரகசியம் காரணம் தெரியுமா?!
10.30 மணிக்கு 3 படத்தை திட்டமிட்டு பத்திரிகையாளர்களுக்கும் திரையுலக வி.ஐ.பி.,க்களுக்கும் படத்தை திரையிடக் காரணம், படத்தின் முன்பாதி அளவிற்கு பின்பாதி விறுவிறுப்பு இல்லாமல் இருந்ததுதான் எனும் தகவல் இப்பொழுது கிடைத்திருக்கின்றது.
பாதித்தூக்கத்தில் படம் பார்த்து விட்டு முன்பாதி பாதிப்பில், பின்பாதியையும் நன்றாக இருந்ததாக பத்திரிகையாளர்கள் எழுதி விடுவார்கள் எனும் நப்பாசைதான் காரணமாம்! அதுதான் இடைவெளியில் 3 பட நிறுவனம் சார்பில் தேநீர் கூட வழங்கப்படவில்லையாம்?!) ஆனால் இரவு பத்திரிகையாளர்கள் காட்சி போட்டு தூக்கத்தை கெடுத்த கடுப்பில் படத்தை தேவைக்கு அதிகமாகவே வறுத்தெடுத்து இருக்கிறார்கள் மீடியாக்காரர்கள் என்பது தான் நிதர்சனம்!