கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
திருமணத்துக்கு பின்னும், 'பிசி'யான நடிகையாக வலம் வருகிறார், அமலா பால். அதிலும், திருமணத்துக்கு முன் இருந்தை விட, இப்போது தான், அதிகமான படங்களில் நடித்து வருகிறார். தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றால், அது, அம்மா கேரக்டராக இருந்தாலும், துணிச்சலுடன் ஏற்று, அதில் நடித்து சாதிக்கிறார். அவருடன் பேசியதிலிருந்து...
அமலா பாலுக்கு, அம்மா ரோல் ரொம்ப பிடித்துள்ளதா?
அம்மா கணக்கு படம் வேறு; பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வேறு. இயக்குனர்கள் கதையை கூறியபோது, என் ரோல் பிடித்தது. நடிகையர், கிளாமர் மட்டும் இல்லாமல், எல்லா விதமான கதைகளிலும் நடிக்க வேண்டும். அம்மா ரோலில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை; மீடியாக்கள் தான், அதை பெரிது படுத்துகின்றன.
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் பற்றி?
மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில், மோகன்லால், நயன்தாரா நடித்து வெளிவந்த படம் இது; அப்படியே, இப்போது தமிழ் பேசுகிறது. இந்த படத்தில் நடித்தது, ஒரு இன்ப சுற்றுலா போய் வந்த மாதிரி இருந்தது.
கொச்சி, சென்னை; இரண்டில் உங்களுக்கு பிடித்த இடம்?
கொச்சி, நான் பிறந்த ஊர். சென்னை, நான் வேலை பார்க்கும் ஊர்; இதுவும் எனக்கு தாய் வீடு போல தான். கொச்சிக்கு போய் விட்டால், அம்மா செல்லமாகி விடுவேன். நல்லா துாங்குவேன்; சாப்பிடுவேன். உடற்பயிற்சி, முறையான யோகா எல்லாம் இருக்காது. ஆனால், சென்னைக்கு வந்தால், ஏனோ தானோ என இருக்க முடியாது.
உங்க அடுத்த படம்?
அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்து வருகிறேன். இது, ரொம்ப ஸ்பெஷலான படம். ஹீரோயின் சப்ஜெக்ட். ஒரே நாளில் காட்டுக்குள் நடக்கும் கதை. எனக்கு காடு என்றால் ரொம்ப பிடிக்கும். அங்கு இன்டர்நெட், மொபைல் என எதுவும் இருக்காது. மரங்களில் இருந்து கொய்யா, சப்போட்டா பழங்கள் பறித்து சாப்பிட்டேன். நல்ல அனுபவம்.
வெயிலை எப்படி சமாளிக்கிறீங்க?
கொஞ்ச நாள் டில்லியில் இருந்தேன். பின், கேரளாவுக்கு போய் விட்டேன். ஆடுஜீவிதம் படத்துக்காக ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது, வெயில் அதிகமாக அடித்ததால், ரொம்ப கறுத்து போய்விட்டேன். சென்னையில் தொடர்ந்து வேலைகள் இருப்பதால், இப்போது இங்கு வந்து விட்டேன். வேறு எங்கும் போகவில்லை.
பரபரப்பு செய்தியான ப்ரியா வாரியார் பற்றி?
எங்க ஊர் பொண்ணு. ஓவர் நைட்ல பிரபலம் ஆகிட்டாங்க. எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கு. ரொம்ப அழகா வேற இருக்காங்க.
தமிழக மாணவர்கள், உங்கள் ஊருக்கு வந்து, 'நீட்' தேர்வு எழுதினரே; அவர்களுக்கு எதாவது உதவி செய்யத் தோன்றியதா?
என்னிடம் யாராவது கேட்டிருந்தால், கண்டிப்பாக முடிந்த அளவு உதவி செய்திருப்பேன். இப்போது, நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு சமூக அமைப்பை துவக்கியுள்ளேன். அதன் மூலம், 100 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய திட்டம் இருக்கு. இந்த மாதிரி நிறைய யோசித்து வைத்து இருக்கோம்.
அமலா பாலின் எதிர்கால திட்டம்?