பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமுத்திரகனி இயக்கிய தமிழ் படம் நிமிர்ந்து நில். இது ஜண்டா பாய் கப்பி ராஜு என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரானது. தமிழில் ஜெயம்ரவி நடித்த கேரக்டரில் தெலுங்கில் நானி நடித்தார். மற்ற கேரக்டர்கள் அப்படியே நடித்தார்கள். சரத்குமார், அமலா பால், ராகினி திரிவேதி, நாசர், சுப்பு பஞ்சு, பார்வதி நாயர் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இப்போது இந்தப் படத்தை தமிழில், வேலன் எட்டுத்திக்கும் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். நாகன் பிக்சர்ஸ் சார்பில் கே.நாகன் வெளியிடுகிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்திருந்ததைப்போல தெலுங்கில் நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இரண்டு படத்திலும் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.