பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்றல் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நிலானி. அதன்பிறகு பிரியசகி, என் இனிய தோழியே, சுந்தரகாண்டம், அன்னக்கொடியும் 5 பெண்களும், பைரவி போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது பிரியமானவளே தொடரில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் உடையில் இருந்த நிலானி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து வீடியோ பதிவாக தனது கருத்தை வெளியிட்டிருந்தார். அதன் சுருக்கம் வருமாறு: நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு வருத்தமளிக்கிறது. அமைதியான வழியில் போராடியவர்கள் 10 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் இல்லாவிட்டால் நானும் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன். இந்த காவல் துறையின் உடை அணிந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். உடம்பு கூசுது என பேசியிருக்கிறார்.
இந்த வீடியோ நேற்று வைரலாக பரவியது. நிலானி அதிகம் பிரபலம் இல்லாதால் இது நிஜ போலீஸ் அதிகாரியின் கருத்துபோல வெளியாகி பரபரப்பானது. இதுகுறித்து ரிஷி என்பவர் வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நிலானி மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.