வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள திரையுலகம் மிகவும் பெருமையாக கருதும் 25-வது ஏசியாநெட் திரையுலக விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. மலையாள திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில் நட்புக்காக, தமிழ்நாட்டில் இருந்து நடிகர்கள் கமல், நதியா, தமன்னா, ஆகியோர் கலந்து கொண்டு மலையாள ரசிகர்களையும் திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார்கள்..
மேலும் இந்தவிழாவில் விருதுபெற்ற பலருக்கும் தன் கையால் விருது வழங்கினார் கமல். கடந்த வருடத்திற்கான ஏசியாநெட் கோல்டன் ஸ்டார் விருதை கமல் கையால் பெற்றுக்கொண்டார் துல்கர் சல்மான். இது விருது வழங்கும் விழா என்றாலும் விருது பெற்றவர்களை விட அதிக கவனத்தை ஈர்த்தது சமீபத்தில் கண் சிமிட்டல் மூலமாக பிரபலமான புருவ அழகி பிரியா வாரியர் மற்றும் ரோஷன் ஜோடி தான்.