சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நடிகை பிரியங்கா சோப்ராவின் இன்னொரு முகம் சமூக சேவகி. ஐ.நாவின் யுனிசெப் அமைப்பின் தூதராகவும் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகள், பெண்கள் முன்னேற்றம், சுதாதாரம், கல்வி ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கிறார்.
யுனிசெப் தூதர் என்ற அடிப்படையில் பிரியங்கா சோப்ரா, வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்றார். மியான்மர் நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட பலர் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை சந்தித்து பேசினார் பிரியங்கா சோப்ரா. பெண்கள், குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். அவர்களின் உயர்வுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்தார். பின்னர் இதுபற்றி அவர் சமூக வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகளின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கடமை உலகுக்கு உண்டு. இப்போது அவர்கள் தங்கிருக்கும் குடியிருப்பின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பருவமழை தொடங்கி விட்டால் குடியிருப்புகள் அனைத்தும் பாழாகிவிடும். இதுதான் உலகிலேயே மிகப் பெரிய அகதிகள் முகாம்.
2017-ம் ஆண்டின் இறுதியில் மியான்மரில் நடந்த இனவெறி தாக்குதலின் புகைப்படங்களை இந்த உலகம் பார்த்தது. இதில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள். அதிகமான கூட்டங்களுக்கு நடுவே நெரிசலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் அடுத்த வேளை உணவு கேள்விக்குறியாக உள்ளது. இருப்பிடமும் கேள்விக்குறியாக உள்ளது. இங்கிருக்கும் குழந்தைகள் எந்த எதிர்காலமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பு மற்றும் கண்ணில் இருக்கும் வெற்றிடத்தை என்னால் உணர முடிகிறது. அவர்களுக்கு நம் உதவி தேவைப்படுகிறது” என்று எழுதியிருக்கிறார்.