டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள நடிகை இனியா, தமிழில் சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார் என்றாலும் வாகைசூடவா படம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதன் பிறகு அம்மாவின் கைபேசி, மவுன குரு, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள், மாசானி, புலிவால், நான் சிகப்பு மனிதன். உள்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்துள்ள பொட்டு படம் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் இனியாவின் தங்கை தாராவும் நடிக்க வந்திருக்கிறார். வருகிற 25ந் தேதி வெளியாகும் கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா... என்ற படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்த படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போக போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்க தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான். படத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓட வேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்த காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்.
தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். என்று அக்கா இனியா அறிவுரை கூறியிருக்கிறார். அவரைப்போல நானும் சினிமாவில் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் தாரா.