அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பல நடிகர்கள், இயக்குனர்கள் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சமூகக் கருத்துள்ள படங்களை எடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இயக்குனர் ஷங்கர் நேற்று இரவு, ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை பற்றி டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள பலரும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து வருத்தப்பட்டிருக்கும் நிலையில் ஷங்கரின் டுவீட் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
பலர் அவருடைய பதிவின் கமெண்ட் பகுதியில் ஷங்கரின் பொறுப்பற்ற டுவீட்டுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். தூத்துக்குடியே பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது எப்படி ஒரு பதிவை போடுவீர்கள் என அவரைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்த டுவீட்டிற்கு கடும் எதிர்ப்புகள் வந்ததை அடுத்து இயக்குனர் ஷங்கர் அந்த டுவீட்டை பின்னர் நீக்கிவிட்டார். அதோடு காலையில் தூத்துக்குடி உயிரிழப்புகளுக்காக வருந்துவதாக புதிதாக டுவீட் ஒன்றைப் போட்டார்.
நேற்றைய டுவீட்டிற்கு வாங்கிய அடி பலமா, அதனால் தான் இன்று வருத்தப்படுவதாக டுவீட் போட்டுள்ளீர்களா என அதற்கும் பதிலடி கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.