விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இறந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.
போராட்டம் சமூக நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக நடத்தப்படுவது அல்ல. 50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள், நலனுக்காக தான் போராடுகிறார்கள் .
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, இப்போதாவது உங்களது மவுனத்தை கலையுங்கள். போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று என பா.ஜ., சொல்கிறது, அதில் ஏன் மக்கள் ஈடுபடக்கூடாது. அரசாங்கம் மக்களுக்காக தான். வேறுயாருக்கும் அல்ல. 2019-ல் கவனமாக இருங்கள்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
அரவிந்த்சாமி
"தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போராட்டாக்காரர்கள் இறந்த செய்தி மிகவும் வருந்தத்தக்கது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்" என நடிகர் அரவிந்த்சாமி டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.