கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விசி வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பொட்டு. பரத், இனியா, நமீதா, சிருஷ்டி டாங்ககே முதன்மை ரோலில் நடித்துள்ளனர். இப்படம் ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், மே 25-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் மீண்டும் தள்ளி போய் உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பட நிறுவனம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது... வரும் 25-ம் தேதி அதிக படங்கள் வெளியாவதால் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதிக பொருட்செலவில் பொட்டு படத்தை எடுத்துள்ளோம். குறைவான தியேட்டர்கள் கிடைத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். அதனால் பொட்டு பட வெளியீட்டை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம். மறு தேதியை குறைந்த படங்கள் வெளியாகும் தேதியாக முடிவு செய்து தரும்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.