ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சசிகுமார், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த 'குட்டிப்புலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதற்கடுத்து 'கொம்பன், மருது, கொடிவீரன்' என அவர் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தான். ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையைச் சொல்லும் படங்களையே அவர் தொடர்ந்து எடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு சாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி வருவது முத்தையா மட்டும்தான். கடைசியாக அவர் இயக்கிய 'மருது, கொடி வீரன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. இருந்தாலும் தன்னுடைய அடுத்த படத்தையும் சாதிப் படமாகவே அவர் உருவாக்க உள்ளார் என்பது அவர் படத்திற்காக வைத்திருக்கம் தலைப்பிலிருந்தே எளிதில் புரிந்திருக்கலாம்.
'தேவராட்டம்' என்ற அந்தப் படத்தின் தலைப்பில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார். அந்தக் கதையில் கவுதமை நடிக்க வைப்பதிலும் ஒரு சாதிய உள்ளீடு இருக்கிறது. சாதி சம்பந்தமான தலைப்புகளை வைப்பதை பலரும் தவிர்த்துவிட்டார்கள். படங்களில் சாதிப் பெயர்கள் இடம் பெறாத அளவிற்குத்தான் காட்சிகளையும் அமைக்கிறார்கள்.
இப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் இப்போதே ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆபாசப் படம் அல்லது சாதிப் படம் இவற்றை எடுப்பதே இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் வேலையாகிப் போய்விட்டது என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.