இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சினிமா பிரபலங்கள் பலர் போலியான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. புகழ் என்பது அவர்களுக்கு ஒரு போதையாகத்தான் அமையும். சமீபகாலங்களில் டுவிட்டர் பாலோயர்கள் மூலம் அவர்களுடைய புகழை எடை போடுவது மிகவும் பொய்யாக நடந்தது. இப்போது அதன் போலி முகம் வெளியில் தெரிந்துவிட்டது.
அமிதாப்பச்சன் உள்ளிட்ட மிகப் பெரும் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளில் கூட போலியான பாலோயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. உண்மையான பாலோயர்களை அதிகம் வைத்திருப்பவர்களில் பிரியங்கா சோப்ரா முதலிடத்தில் இருக்கிறார். கடைசி இடத்தில் ஷாரூக்கான இருக்கிறார். ஷாரூக்கான் கணக்கில் உண்மையான பாலோயர்களை விட போலியான பாலோயர்கள் அதிகம் இருப்பது அதிர்ச்சிகரமானத் தகவல்.
ஹிந்தி நட்சத்திரங்களிடம் இப்படி போலியான பாலோயர்கள் அதிகம் இருப்பது போல தமிழ் நட்சத்திரங்களிடமும் போலியான பாலோயர்கள் நிறையவே இருக்கிறார்களாம். அதுமட்டுமல்ல போலியாக அதிக பாலோயர்களை சேர்த்துக் கொண்டு தங்களை மீடியாக்கள் என்று சொல்லிக் கொண்டு பலரும் படங்களை விளம்பரப்படுத்த பணம் பறிக்கும் சம்பவங்களும் தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது என்கிறார்கள்.
டுவிட்டர் இந்தியா உடனடியாக இப்படி போலியாக பாலோயர்களைச் சேர்த்துள்ளவர்களின் கணக்குகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், சமந்தா உள்ளிட்டவர்கள் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களை வைத்திருக்கிறார்கள்.