டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி, 2018 - 2020-ம் ஆண்டுக்கான தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு இசை அமைப்பாளர் தினா மற்றும் கல்யாண சுந்தரம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தினா வெற்றி பெற்றார்.
செயலாளராக சாரங்கபாணியும், பொருளாராக குருநாதனும் வெற்றி பெற்றனர். இசை கலைஞர்கள் சங்க அறக்கட்டளையின் தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமாரும், செயலாளர்களாக தினா மற்றும் குருநாதனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
"இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்கு பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடத்தப்படும். சங்கத்திற்கு பிரமாண்டமான புதிய கட்டடம் கட்டப்படும். அதில் இசை பயிற்சி நிலையம், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் கட்டப்படும். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" என்கிறார் தினா.
வெற்றி பெற்றவர்கள் வருகிற 27ந் தேதி பதவியேற்கிறார்கள்.